Tuesday, July 28, 2009

திருடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நேரம் 6.00 PM. தொலைபேசி அழைத்து.
"ஹலோ, சொல்லுடா "
"டேய் எங்க இருக்க?"
"ஆபீஸ்ல"
"விஜய் எங்க?"
"ஆபீஸ்ல தான் இருப்பாரு"
"டேய் வீடு திறந்திருக்குடா !?"
"என்னடா சொல்லுற ?! நல்ல செக் பண்ணு"
"டேய் விளையாட்டுக்கு சொல்லல, நிஜமாதான் ! இரு நானே திரும்ப கூப்பிடுறேன் "
தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நேரம் 7.40PM - இடம் - வீடு

காவல் துறை ஆய்வாளர் ஆயி வாலருடன் (நாய்) துப்பறிந்துகொண்டிருப்பாரென்று எண்ணி சென்றால் சில காவல் துறை மக்களுடன் பொது மக்களும் இருந்தனர். எல்லோரும் உங்க பொருளெல்லாம் இருக்கான்னு பார்க்க சொன்னாங்க. மாசக்கடைசியில் என்ன கோடி ரூபாய்க்கு 500 ருபாய் கம்மியாகவா வைத்திருப்போம்? இருந்தது 4 set அழுக்குதுணி மற்றும் பழைய நியூஸ் பேப்பர் மட்டும் தான். வேறென்ன எதிர்பார்க்க முடியும் எங்க ரூமில்? கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் காணாமல் போயிருந்தது. அது எங்க வீட்டுக்கு வாங்கிய பூட்டு. கடைசியில் திருடனுக்கு அதுதான் மிச்சம்.

திருடனை பற்றிய எங்கள் யூகம் சில -

1. தொழிலுக்கு புதுசாக இருக்க வேண்டும் - மாச கடைசியில் திருட வந்ததால்.
2. வேறு ஏரியாவாக இருக்க வேண்டும் - எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தாண்டி போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.
3. IT மக்கள்னு தப்பா நினைத்து கைவரிசையை காட்டலாம்னு நினைச்சிருக்கலாம் - நாங்க IT ல தான் இருக்கோம் ஆனா software இல்ல.
4. எங்களை விட ரொம்ப நொந்தவனாக இருக்க வேண்டும் - பூட்டை மட்டும் திருடியதால். ஏன்னா வீட்டுல TV/DVD Player எல்லாம் இருக்கு. அத வெளியில் கொண்டுபோக முடியாது ஏன்னா யாரவது பார்த்தா கேப்பாங்க.

இதில் சில காமெடி காட்சிகள் - பக்கத்து வீட்டு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. போலீஸ் விசாரித்துக்கொண்டிருந்த பொது பக்கத்து வீட்டுக்காரன் போனில் பேசியபடி வீட்டை திறந்துகொண்டு நுழைந்தான் ஆனால் கதவில் பூட்டு இல்லாததை கவனிக்காமல். சொன்ன பிறகே கவனித்தான் ஆனால் பதறவில்லை - நம்ம சாதி போல.

என்றாலும் திருடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Wednesday, July 22, 2009

சுய மதிப்பீடு

Appraisal என்னும் சுய மதிப்பீடு படிவம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் பூர்த்தி செய்து என் நிறுவனத்திற்கு கொடுப்பது வழக்கம். இந்த வருடம் பொருளாதார மந்தநிலை காரணமாக இது வரை எதுவும் வராமல் இருந்தது. இன்று காலை எனது மனிதவள மேம்பாட்டு மேலாளர் (HR Manager) தொலைபேசி மூலம் அழைத்து எங்களது நிறுவன இணைத்தளத்தில் பூர்த்தி செய்யும்படி கூறினார்.
நானும் விக்கிரமாதித்தன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி செல்லும்போது அது மீண்டும் மீண்டும் மரத்தில் ஏறும் கதையாக ஒரு பக்கம் பூர்த்தி செய்வதற்குள் ஒன்று இணையத்தொடர்பு அறுந்துவிடும் அல்லது கணினி விழித்துக்கொண்டிருக்கும். இதையும் தாண்டி பூர்த்தி செய்து முடிப்பதற்குள் ஸ்ஸ்அப்பப்பா கண்விழி பிதுங்கிவிட்டது. எதற்காக இந்த விளம்பரம் என்று கவுண்டமணி பாஷையில் கேட்டால் நாமும் ஒரு IT கம்பெனி என்று field ல form ஆகிட்டோம்?! அதான் என்றார்கள்.
நீங்க கொடுக்கபோற 200 அல்லது 300 ரூபா காசுக்கு இந்த விளம்பரம் தேவையா?!!!!

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ...

முள்ளும் மலரும் என்றொரு படத்தில் வரும் இந்த பாடல் இன்றைய தமிழக அரசியலுக்கு முற்றிலும் பொருந்தும். ஈழதமிழர்கலாகட்டும் அண்டை மாநிலமாகட்டும் ஒரே பார்வைதான். ஈழத்தமிழர்களை இலங்கையை சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டு தப்பிவிடலாம். ஆனால் இப்போது தமிழகம் மூன்று புறங்களிலும் நசுக்கப்பட்டு வருகிறது. மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான நீர் நமக்கு மூன்று அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகிறது. ஏன் எனஊருக்கு கூட அண்டை மாநிலமாம் கேரளத்தில் மழை பெய்தால் தான் குடிநீர் கிடைக்கும். இப்போது நமக்கு என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நம் எல்லையில் இருந்தாலும் கர்நாடக அரசின் வயற்றில் புளியைகரைப்பதால் அது எதிர்க்கிறது. பாலாற்றில் அணைகட்ட தடை இருந்தபோதும் நீதிமன்றம் எதிர்த்த போதும் ஆந்திர அரசு தன்வேலையை ஆரம்பித்துவிட்டது. முல்லை பெரியார் அணை பலமாக இருப்பதை மத்தியகுழு உருதிபடுத்தியபோதும் புதிய அணை கட்ட துபாய் கட்டுமான நிறுவனத்திற்கு சர்வே செய்ய அழைத்துள்ளது. மீதம் இருப்பது கடல் மட்டும்தான். அதற்கும் ஆபத்து இலங்கை கடற்படை மூலம். இப்படி பல இடர்கள் இருந்தாலும் நமது முதல்வருக்கு இப்போது தலையாய கடமை என்னவென்றால் "பொன்னர் சங்கர்" படத்தை துவக்கி வைப்பது.
வெறும் அறிக்கை அரசியல் நடத்தும் எதிர்கட்சிகள், உரிமை இருந்தும் மத்திய அரசிடம் கேட்க மறுக்கும் ஆளும் கட்சி! இதை எல்லாம் மீறி நாமும் தமிழரென்று எண்னிக்கொண்டிருபபதைவிட இந்த பாடலை கேட்டு விட்டு கண்,காது மற்றும் அனைத்தையும் மூடிக்கொண்டிருபோம்.
என்ன செய்ய ?!!! புலம்பத்தான் முடியும்!! ஓட்டையும் காசுக்கு வித்தாச்சு!!